தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் லோக் அதாலத் 90 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு: ரூ.719 கோடி பைசல்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 90,892 வழக்குகள் விசாரிக்கப்பட்டு ரூ.718 கோடியே 74 லட்சத்து 11 ஆயிரத்து 339 பைசல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் நேற்று தேசிய லோக் அதாலத் நடந்தது. இந்த அதாலத்தில் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விதமான வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் வழக்கு தொடர்வதற்கு முந்தைய புகார் மனுக்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக, தமிழகம் முழுவதும் அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

Advertisement

சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும், தாலுகா அளவில் 489 அமர்களும் ஏற்படுத்தப்பட்டன. மொத்தம் 498 அமர்வுகளில் வழக்குகள் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 90,892 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.718 கோடியே 74 லட்சத்து 11 ஆயிரத்து 339 பைசல் செய்யப்பட்டது. லோக் அதாலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும் வழக்குகளின் மீது உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News