தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டை போல் கர்நாடக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டம்

பெங்களூரு: நீட் தேர்வில் தேசியளவில் முறைகேடு நடந்துள்ளதாலும், கர்நாடக மாநில மாணவர்கள் பாதிக்கப்படுவதால், தமிழ்நாட்டை போல், கர்நாடகாவில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் பெரியளவில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நடந்து வருகிறது.
Advertisement

இதனிடையில் தென்மாநிலங்களில் நீட் தேர்வு அறிமுகம் செய்த காலம் முதல் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டு மொத்தமாக அரசுடன் இணைந்து அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் உள்பட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற குரலும் தமிழ்நாட்டில் இருந்து எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு காரணமாக தற்போது விழித்து கொண்டுள்ள கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது. தமிழ்நாட்டை போல், கர்நாடக மாநில அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை உறுதி செய்து வருகிறது.

நீட் தேர்வு ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்து வருவதாக முதல்வர் சித்தராமையா வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். தற்போது நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றியது போல், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இரண்டாமாண்டு பியூசி தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை நேற்று முடிவு செய்துள்ளது.

Advertisement

Related News