தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் முதல்வருக்கு நன்றி

சென்னை: தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தின் நீண்டநாள் கோரிக்கையான ஒற்றை சாளர முறையை அமல்படுத்த தமிழக முதல்வருக்கும், துறை அமைச்சர், துறை செயலாளர் மற்றும் விடுதி சார்ந்த அலுவலர்களுக்கு தொடர்ச்சியாக மனு அளித்து வந்த நிலையில், இதை ஏற்று தமிழ்நாடு அரசு எளிமை ஆளுமை திட்டத்தின் கீழ் விடுதிகளுக்கு உரிமை வழங்குதல் திட்டத்தை வகுத்து கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, இச்சங்கத்தினர் சோழிங்கநல்லூர் முதல் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் வரை விடுதி சம்பந்தமான அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சென்று இனிப்பு வழங்கினர்.
Advertisement

பின்னர் சங்கத்தின் மாநில தலைவர் லயன் ஏ.சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக முதல்வர் எளிமை, ஆளுமை திட்டத்தின் கீழ் எங்களுடைய கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள 25 ஆயிரம் விடுதி உரிமையாளர்கள், 2 லட்சம் ஊழியர்கள், 20 லட்சம் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்க விடுதி, ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு கோடிக்கு மேல் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் விடுதிகளுக்கு உரிமை வழங்குதலை ஒற்றை சாளர முறையில் அறிவித்தமைக்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதேபோல் மாநிலம் முழுவதும் விடுதி உரிமையாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்க உள்ளோம்,’’ என்றார்.

நிகழ்ச்சியில், சங்க செயலாளர் ஆர்.வி.சுப்பையா, அறங்காவலர் கார்த்திக், இணை தலைவர் சீனிவாசலு, லேகா சீனிவாசலு, சின்ன ராஜா, சுப்பையா மற்றும் நிர்வாகிகள் காந்தி, பாலா, எழிலரசு, அர்ஜூன், திருஞானம், மற்றும் கோகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Related News