தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி மேல் பணம் பறிமுதல்!!

சேலம் : சேலம் மாவட்டம் தாரமங்கலம் அதிமுக நகர செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி ரொக்கம், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாரமங்கலம்  நகராட்சி அதிமுக நகர செயலாளராக உள்ள பாலசுப்ரமணியம் தாராமங்கல நகர்மன்ற கவுன்சிலராகவும் இருந்து வந்துள்ளார். தமது வீட்டை ஒட்டியே நகைக்கடைகள் நடத்தி வரும் பால சுப்ரமணியம், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கட்டுக்காட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
Advertisement

வருமான வரித்துறை உதவி ஆணையர் பிரதீப் தலைமையில் 8 பேர் கொண்ட குழு பால சுப்ரமணியம் வீடு மற்றும் நகைக்கடைகளில் இரவு முதல் அதிகாலை 2 மணி வரை சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத சுமார் ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் கிலோ கணக்கில் தங்க நகைகள் சிக்கியுள்ளன. இவற்றை அட்டை பெட்டிகளில் போட்டு வைத்து சீலிட்டு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இதே போல வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஓட்டேரி, ஏழு கிணறு உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.2.60 கோடியும் திருச்சியில் ரூ.55 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Related News