தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விருதுநகரில் ஜவுளி பூங்கா உள்கட்டமைப்பு பணிக்கு ரூ.437 கோடியில் 'டெண்டர்' கோரியது தமிழக அரசு!!

சென்னை: விருதுநகர் ஜவுளி பூங்கா உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.437 கோடியில் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரத்தில் சுமார் 1,052 ஏக்கர் நிலத்தில் பி.எம்.மித்ரா எனப்படும் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்தப் பூங்கா அமைப்பதற்கு கடந்த 2023 ஆண்டு பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜவுளி பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி, சிப்காட் நிறுவனம் சார்பில் சுமார் 1,052 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தத் திட்டமானது மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஜவுளி பூங்காவில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் உள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், மத்திய அரசு ரூ.1894 கோடியை ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது, பி.எம்.மெகா இண்டர் கிரேடட் டெக்ஸ்டைல்ஸ் ரீஜன்ஸ் அண்ட் அப்பேரல் பார்க் என்ற அமைப்பு மற்றும் தமிழக அரசின் சிறப்பு முகமை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சிப்காட் நிறுவனமானது தனது சார்பில் ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், இதையடுத்து, விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில், பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்க, முதல் கட்டமாக, 437 கோடி ரூபாய் செலவில், கழிவுநீர் வெளியேற்றும் பணி, தண்ணீர் வினியோகம், மழைநீர் வடிகால் கால்வாய்களுடன் கூடிய சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, தமிழக அரசின் 'சிப்காட்' நிறுவனம் நேற்று, 'டெண்டர்' கோரி உள்ளது.

Related News