தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்க தமிழக அரசு தொடங்கியுள்ள புதிய இணையதளம்!!

சென்னை : பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கிடவும் www.pocsoportal.tn.gov.in என்ற இணையதளம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய இணையதளத்தை இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் மூலம் பாலியல் வழக்குகளை தனியாக கவனித்து விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் குறித்த விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement

மேலும் குழந்தை பராமரிப்பு இல்லங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் நலனையும் உறுதிபடுத்திட தனிநபர் பராமரிப்பு திட்ட செயலி (Individual Care Plan Application), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள் நல இல்லங்களையும் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஆய்வு மற்றும் கண்காணிப்பு செயலி ( Inspection and Monitoring application ) ஆகியவற்றின் பயன்பாட்டையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய ஆதரவற்ற கைம்பெண்களுக்கு அரசிடம் இருந்து எளிதில் நலத்திட்ட உதவிகள் கிடைத்திடும் வகையில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான http://tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணைய பயன்பாட்டையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News