தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.4.41 லட்சம் கோடியாக உயர்வு

சென்னை: தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 635 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2024-25ம் நிதியாண்டில் ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 184 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 11.92 சதவீத பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து ரூ. ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 127 கோடியும், சென்னை மாவட்டத்திலிருந்து ரூ.65 ஆயிரத்து 479 கோடி மதிப்பிலும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. திருப்பூரிலிருந்து ரூ.39 ஆயிரத்து 618 கோடி மதிப்பிலும், கோவை மாவட்டத்திலிருந்து ரூ.29 ஆயிரத்து 763 கோடி மதிப்பிலும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ரூ.27 ஆயிரத்து 936 கோடி மதிப்பிலும், செங்கல்பட்டு மாவட்டம் ரூ. 20 ஆயிரத்து 640 கோடி மதிப்பிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ஏற்றுமதி 70 சதவீதமாக உயர்ந்து ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்து 182 கோடி மதிப்பில் ஏற்றுமதியாகியுள்ளது.

Related News