தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு அரசுத் துறைகளில் 418 இடங்கள் :டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 418 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

பணியிடங்கள் விவரம்:

1. உதவி இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்)- தமிழ்நாடு மின் விநியோக கழகம்: மொத்த காலியிடங்கள்: 391. சம்பளம்: ரூ.39,800-1,26,500. தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. உதவி கணக்கு அதிகாரி: (தமிழ்நாடு மின் விநியோக கழகம்) 25 இடங்கள். சம்பளம்: ரூ.56,300- 1,78,000. தகுதி: சிஏ அல்லது ஐசிடிபிள்யூ படித்திருக்க வேண்டும்.

3. உதவி புரோகிராமர்: (அரசு ரப்பர் கழகம்): 1 இடம். தகுதி: கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது தகவல் தொழில்நுட்பம் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில் எம்எஸ்சி.,

4. அக்கவுன்டென்ட்: 1 (தமிழ்நாடு மாங்கனீசு நிறுவனம்): 1 இடம். தகுதி: பி.காம் மற்றும் சிஏ இன்டர் தேர்ச்சி.

வயது: 01.07.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயதிற்குள்ளும், பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவைத் தவிர இதர பிரிவினர்கள் அதாவது எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ சீர்மரபினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் தமிழ் மொழித் திறன் தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் பணிக்குரிய முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது.

ஆக.4ம் தேதி முதல் 10ம் தேதி வரை தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விவரம், தேர்வு மைய விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம்: ரூ.100 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ அருந்ததியர்/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது. ஒன் டைம் ரிஜிஸ்டிரேஷன் முறையில் தங்களைப் பற்றிய விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதவர்கள் தனியாக கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.06.2025.

Advertisement