தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் 10,000 உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்

சென்னை: தமிழகத்தில் 10,000 உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் Guidance_TN இன்று உலகளாவிய திறன் மையங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ANSRGlobal உடன் ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Advertisement

இதன்மூலம் தமிழகத்தில் 10,000 உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பெங்களூருவில் உள்ள தலைசிறந்த உலகளாவிய திறன் மையங்களுடன் நடைபெற்ற வட்டமேசை விவாதத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த மையங்களின் தலைவர்களில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக பெண்கள். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

நம்முடன் ஒப்பந்தம் செய்ய அவர்கள் எடுத்த முடிவு, தமிழ்நாட்டின் தொலைநோக்கு பார்வையின் வலிமையையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியால் ஏற்பட்ட நம்பிக்கையையும் காட்டுகிறது. தமிழ்நாடு உலகின் மிகவும் துடிப்பான உலகளாவிய திறன் மையங்களின் இருப்பிடமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. தொழில்நுட்பம், வாகனம், BFSI, பொறியியல், விண்வெளி மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்கள் அனைத்தும் நமது மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளன.

Advertisement