cOcOn 2025 மாநாட்டின் சைபர் பாதுகாப்பு போட்டியில் தமிழக இணையவழி குற்றப்பிரிவுக்கு 2ம் இடம்
சென்னை: தமிழக இணையவழி குற்றப்பிரிவு cOcOn 2025 மாநாட்டின் சைபர் பாதுகாப்பு போட்டியில் இரண்டாம் இடத்தை வென்றது. தமிழ்நாடு காவல் துறையின் ஒரு பெருமைமிகு சாதனையாக, தமிழக இணையவழி குற்றப் பிரிவு காவல்துறையினர் அக்.10, 11ம் தேதிகளில் கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள கிராண்ட் ஹயாத்தில் நடைபெற்ற cocon 2025 மாநாட்டின் புகழ்பெற்ற Law Enforcement Track பிரிவில் இரண்டாம் இடத்தை வென்றுள்ளனர். சட்ட அமலாக்க அதிகாரிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Law Enforcement Track என்பது இணைய குற்றங்கள், டிஜிட்டல் விசாரணைகள் மற்றும் டிஜிட்டல் யுகத்தில் தேசிய பாதுகாப்பு சவால்கள் போன்ற பரிமாணங்களை ஆராய்வதற்கான ஒரு சிறப்புப் நிகழ்ச்சியாகும். இதில் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள், விசாரணை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சர்வதேச சட்ட அமலாக்க அமைப்புகள் கலந்துகொண்டு இணையவழி குற்றங்கள் மற்றும் அதை தடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த அமைப்பின் முக்கிய நிகழ்வாக அமைந்த Law Enforcement Agency Capture the Flag (LEA CTF) Challenge Event-ல் மாநாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பதிவுசெய்யப்பட்ட காவல் அமைப்புகள் கலந்துகொண்டன. இதில் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு சார்பாக விழுப்புரம் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் (தொழில்நுட்பம்) ராஜசேகர், நாமக்கல் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பூர்ணிமா, மற்றும் வேலூர் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் (தொழில்நுட்பம்) யுவராணி ஆகியோர் இணைந்த குழு, இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் இயக்குநர் சந்தீப் மித்தல், அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இரண்டாம் இடத்தைப் வென்றுள்ளது.
இந்த வெற்றி, அதிகாரிகள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களின் வெளிப்பாடாகும். தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர், காவல் படைத் தலைவர் இந்தச் சாதனையை நிகழ்த்திய இந்த குழுவினரை பாராட்டினார். அவர்கள் வெளிப்படுத்திய சிறப்பான செயல்திறனுக்கு வாழ்த்துத் தெரிவித்து, இந்த வெற்றி தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் உயர்ந்த தொழில்நுட்ப தரத்தைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு அறிவுரை:
* வங்கி கணக்குகளைத் திறந்து கொடுப்பதற்காக மற்றும் சிம் பாக்ஸ் அல்லது இணைய மின்னணு சாதனங்களை மறைத்து கொண்டு செல்லும் பணிகளுக்கான கமிஷன் கொடுக்கப்படும் போன்ற வாக்குறுதிகளை நம்பாமல் இருக்கவும். இவை தண்டனைக்குரிய குற்றமாகும்.
* நீங்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று கூறி அச்சுறுத்தல் அழைப்புகளை சந்தித்தால் பதறாதிருப்பதும், எதுவும் டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையத்தில் கைது என்பது இல்லை என்பதை நினைவில் வைக்கவும்.
* அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் எந்த புகார் அல்லது சரிபார்ப்பிற்காகவும் பணம் கேட்க மாட்டார்கள்.
* ஆதார், பான், வங்கி விவரங்கள் அல்லது OTP போன்ற தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்களை தொலைபேசியில் அல்லது வீடியோ அழைப்புகளில் பகிர வேண்டாம்.
* அதிகாரிகள் எனக் கூறி, ஏ. ஐ. அல்லது பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களைப் பயன்படுத்தி மோசடிக்க முயலும் அந்நியர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
* AnyDesk, TeamViewer போன்ற ரிமோட் அணுகல் செயலிகளை அந்நியர்கள் கேட்டால் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்: இது உங்கள் கருவியை மோசடிக்காரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும்.
புகார் அளிக்க:
நீங்கள் ஏதேனும் இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று நீங்கள் சந்தேகித்தால் அல்லது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நிதி மோசடிகள் ஏற்பட்டால் இணையவழி கிரைம் உதவி எண் 1930 ஐ டயல் செய்யவும் அல்லது www.cybercrime.gov.in இல் புகார் அளிக்கவும்.