தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது; பாஜக கூட்டணி ஒரு தற்காலிக ஏற்பாடு: அன்வர் ராஜா தகவல்

Advertisement

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது. மேலும் பாஜககவுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடுதான் என அதிமுக அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்வர்ராஜா கூறியதாவது : தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருக்காலும் நடக்காது. பாஜககவுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடுதான். கொள்கையின் அடிப்படையில் கூட்டணி அமைக்கவில்லை. வெற்றியின் அடிப்படையில் கூட்டணி உருவாகும். மேலும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு கிடைக்காது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேலும் கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் என்றகை்கும் விரும்ப மாட்டார்கள். முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் பாஜகவின் திட்டம் எதுவும் பலிக்காது. எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்திதான் தேர்தலில் அதிமுக போட்டி இட உள்ளது. கூட்டணி ஆட்சி என்று பாஜக நிர்பந்தித்தால் அதற்கு அதிமுக பணியாது. அதிமுகவை யாராலும் அபகரிக்கவோ வீழ்த்தவோ முடியாது. தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை பாஜக ஏற்கவில்லை என்றால் இரு கட்சிகளிடையிலான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை. பாஜவுடன் இணக்கமாக உள்ளதால் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கான நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News