தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு 2030ம் ஆண்டிற்குள் புதிய எச்ஐவி பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பாக, எச்ஐவி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த் தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வருபவர்கள் தமிழ்நாட்டில் 1,39,350 பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என்கின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement

அந்தவகையில் முதற்கட்டமாக 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்த திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக எச்ஐவி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,39,350 பேர். புதிய நோய் பாதிப்புகள் பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2030ம் ஆண்டிற்குள் புதிய எச்ஐவி/எய்ட்ஸ் பாதிப்புகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு கொண்டு வருவதற்குரிய உறுதி ஏற்று, ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

முதல்வர் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக காலை உணவு திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் இனிமேல் தமிழ்நாட்டில் மருத்துவமனைக்கு வருகிற நோயாளர்கள் என்று சொல்வதைக் காட்டிலும் “மருத்துவப் பயனாளர்கள்” என்று சொல்வதே சாலச் சிறந்ததாக இருக்கும், எனவே இனி முதற்கொண்டு “மருத்துவப் பயனாளர்கள்” என்றே அழைக்க வேண்டும் என்று சொல்லி அது தற்போது அரசாணையாக இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவமனைக்கு வருபவர்களை “மருத்துவப் பயனாளர்கள்” என்றே அழைக்க வேண்டும் என்கின்ற சுற்றறிக்கையை சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் மூலம் அனுப்பபட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement