தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு முழுவதும் புதிதாக 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை : வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைப்பு!!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2-வது கட்ட விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மகளிருக்கான ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம்’ ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கப்படும்” என தமிழ்நாடு சட்டப்பேரவை பேரவையில் 2023ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் கட்டமாக சுமார் 1,13,75,492 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிருக்கே நேரடியாக சென்றடையும் வகையில் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி கூடுதலாக சுமார் 28 லட்சம் பெண்கள் அரசுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சுமார் 17 லட்சம் பெண்களுக்கு கூடுதலாக மாதம் ரூ.1000 வழங்க வழங்க அரசு முடிவு செய்து, டிச.12ம் தேதி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, கூடுதல் மகளிர் பயனடையும் வகையில், இரண்டாம் கட்டமாக இன்று (12ம் தேதி) முதல் வழங்கப்பட உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2-வது கட்ட விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை

வங்கிக் கணக்குகளில் வரவுவைக்கப்பட்டது.

Advertisement

Related News