தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!
மயிலாடுதுறை, நாகை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement