தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டு கொள்கையை மாற்ற சொல்ல ஒன்றிய அரசுக்கு உரிமை கிடையாது: அன்புமணி பளீச்

Advertisement

சேலம்: தமிழ்நாட்டு கொள்கையை மாற்ற சொல்ல ஒன்றிய அரசுக்கு உரிமை கிடையாது என்று அன்புமணி தெரிவித்து உள்ளார். பாமக தலைவர் அன்புமணி சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற ஒரு அச்சம் நிலவுகிறது. தமிழ் நாட்டின் உரிமையை நாம் என்றும் இழக்கக்கூடாது.

ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்ததால் நிதி தர மாட்டோம் என்று கூறுவது தவறாகும். ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்தால் ஏற்பதும், ஏற்காததும் மாநில அரசின் உரிமையாகும். தமிழகத்தில் இருமொழி கொள்கைகள் கடந்த 60 ஆண்டாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. எந்த மொழியும் திணிக்கக்கூடாது. எல்லா மொழியும் கற்றுக்கொள்ளலாம். தமிழ்நாட்டிற்கு ஒரு கொள்கை உள்ளது. அந்த கொள்கையை மாற்றச் சொல்லும் உரிமை ஒன்றிய அரசுக்கு கிடையாது. அதிமுக கூட்டணியில் எனக்கு எம்.பி., சீட் தருவதாக கூறுவது தவறான செய்தியாகும்.

இவ்வாறு அன்புமணி கூறினார்.

Advertisement