தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது: வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் அமுதா பேட்டி!

 

Advertisement

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் அமுதா பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் 17 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது.

சென்னையில் வரும் 23ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 58.9 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்றும் அமுதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் 16ஆம் தேதி வரை வழக்கத்தை விட கூடுதலாக 37 சதவீதம் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த ஆண்டு 50 சென்டிமீட்டர் வரை மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார். விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 24ஆம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இத்தனை புயல்கள் வரும் என்பதை கணக்கிட்டு கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக கடலோரப் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். கடலுக்குச் சென்ற மீனவர்கள் வரும் 21ம் தேதி காலைக்குள் கரைக்குத் திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியுளளார்.

 

Advertisement

Related News