தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக புதிய டிஜிபி நியமன விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு

புதுடெல்லி: தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பொறுப்பு டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவான பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்புகளை மீறி உள்ளது எனக்கூறி தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இந்த வழக்கை பரிசீலனை செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தலைமையிலான அமர்வு,‘‘புதிய டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொடுக்கும் பரிந்துரையை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யு பி எஸ் சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்து நீதிமன்ற அவமதிப்பு மனுவை முடித்து வைத்தது.

இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவின் அடிப்படையில் யுபிஎஸ்சி நிர்வாகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் அமுதா மற்றும் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு டிஜிபியாக நியமனம் செய்ய 3 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை யு.பி.எஸ்.சி தரப்பில் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் தற்போது வரையில் புதிய டிஜிபி நியமனம் செய்வது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவதாக ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘புதிய டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் யுபிஎஸ்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆனால் புதிய டிஜிபியை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு யு.பி.எஸ்.சி நிர்வாகம் 3 பேரின் பெயர்களை பரிந்துரை செய்த பிறகும் அதுதொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. எனவே புதிய டிஜிபி நியமனம் செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News