தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு சிறப்பு மையம்: ரூ.1 கோடியில் தமிழ்நாடு அமைக்கிறது

சென்னை: தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இருவாச்சி பறவைகள் வெப்பமண்டல காடுகளில் விதைகளை பரப்பி, மரங்களில் மீளுருவாக்கத்திற்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. இருப்பினும், வாழ்விடச் சீரழிவு, காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த பறவை இனங்கள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இப்பறவைகளின் பாதுகாப்பிற்கான அவசரத்தை உணர்ந்து, அறிவியல் ஆராய்ச்சி, வாழ்விட மறுசீரமைப்பு, சமூக ஈடுபாடு மற்றும் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ள தமிழ் நாடு ஒரு பிரத்யேக மையத்தை நிறுவுகிறது.
Advertisement

அதன்படி, ஆனைமலை புலிகள் சரணாலயம், கோயம்புத்தூர் மாவட்டம் அதன் சுற்றுச்சூழல் வளம் மற்றும் தற்போதுள்ள பாதுகாப்பு உள்கட்டமைப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெரிய இருவாச்சி, மலபார் சாம்பல் இருவாச்சி, மலபார் கருப்பு வெள்ளை இருவாச்சி மற்றும் இந்திய சாம்பல் இருவாச்சி ஆகிய 4 இனங்கள் காணப்படுகிறது. இந்த மையத்தை நிறுவுவதற்காக அழிந்து வரும் உயிரின பாதுகாப்பு நிதியத்தின் கீழ் மொத்தம் ரூ.1 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி தமிழ்நாட்டின் துணிச்சலான பாதுகாப்பு பயணத்தில் மற்றொரு மைல்கல் ஆகும். இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பு சரணாலயம், நீலகிரி வரையாடு திட்டம், தேவாங்கு பாதுகாப்பு மையம் மற்றும் மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு மூலம் யானைகள் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றை நிறுவியதை தொடர்ந்து இருவாச்சி பறவைகளின் பாதுகாப்பபிற்கான சிறப்பு மையம் உருவாக்கப்பட்டதன் மூலம், இருவாச்சி பறவைகள் பாதுகாப்பை நிறுவனமயமாக்கிய முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.

அழிந்து வரும் பல உயிரினங்களை பாதுகாக்கும் பாரம்பரியத்தை கொண்ட ஆனைமலை புலிகள் காப்பகம், இப்போது இருவாச்சி சூழலியல் மற்றும் பாதுகாப்பு தலைமைத்துவத்திற்கான மையமாக செயல்படும். இந்த மையம் பல்லுயிர் பாதுகாப்பிற்கான எதிர்கால தலைமுறை பாதுகாவலர்களை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement