தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை செய்யாத ஆளுநர் தேவையில்லை: அமைச்சர் கோவி.செழியன் காட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி.செழியன் இன்று அளித்த பேட்டி: இந்திய அளவில் தமிழகம் தனிமனித வருமான வளர்ச்சியில் 16.5% என்ற இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல்வரின் சிறப்பான ஆட்சியால் தான் இது நிகழ்ந்துள்ளது. இதுவே இந்த ஆட்சியின் நான்கரை ஆண்டு சாதனையாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய தமிழக முதல்வர் பல்வேறு வகைகளில் மக்களின் தேவையை உணர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Advertisement

‘ஆட்டுக்கு தாடி தேவையில்லை. அதே போன்று தமிழ்நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை’ என்று அண்ணா கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக ஆளுநர் செயல்பட வேண்டும். மாநில அரசின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்த்து பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது இருக்கக்கூடிய ஆளுநர் ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்பட்டு வருகிறார். இதன் எதிரொலியாகவே நமது அரசு கொண்டு வரும் தீர்மானங்களையும், கோரிக்கைகளையும் புறக்கணித்து வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்கு சேவை செய்யாத ஆளுநர் ரவி தேவையில்லை என்றார்.

Advertisement