தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை : வெட்டிய ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரங்களை நட்டு வளர்க்க அறிவுறுத்தல்!!

சென்னை : பனை மரங்கள் வெட்டப்படுத்தவதை தடுக்க ஆட்சியர் தலைமையிலான மாவட்டம் மற்றும் வட்டார அளவிலான குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில், பனை மரங்களை வேரோடு வெட்டி விற்கவும் செங்கல் சூழல்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க மாவட்டம் மற்றும் வட்டார அளவில் குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement

ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட மாவட்ட குழுவில் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, கதர் கிராம தொழில் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இதே போல தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தலைமையேற்ற வட்டார குழுவில் வேளாண் துறை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வட்டார அளவிலான குழு வயல் ஆய்வு மேற்கொண்டு பனை மரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு பயிர் சாகுபடி பதிவேட்டில் பதிவேற்றம் செய்யும். இதன் பின்னர், தவிர்க்க முடியாத காரணங்களால், பனை மரங்களை வெட்ட வேண்டி வந்தால், மாவட்ட அளவிலான குழுவிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பனை மரத்தை வெட்டும் போது, அதனை ஆய்வு செய்ய குழுவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் வெட்டப்பட்ட மரத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி கட்டாயம் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கு இணையாக 10 மரங்களை நட்டு வளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement