தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விடை பெற்றார் சங்கர் ஜிவால் தமிழ்நாட்டின் டிஜிபியாக(பொ) வெங்கட்ராமன் பதவியேற்பு

 

Advertisement

சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபியாக (பொறுப்பு) வெங்கட்ராமன் இன்று மதியம் பதவியேற்றார். அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஒப்படைத்தார்.

தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டிஜிபியாக (பொறுப்பு) வெங்கட்ராமன் இன்று மதியம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் அனைத்து பொறுப்புகளையும் புதிய டிஜிபி வெங்கட்ராமனிடம் சங்கர் ஜிவால் ஒப்படைத்தார். இந்நிகழ்சியின் போது உயர் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் உடன் இருந்தனர். ஓய்வுபெற்ற சங்கர் ஜிவால் இந்திய காவல் பணியில் 35 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றினார். இவருக்கு காவல்துறை சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை பிரிவு உபசார விழா கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து முறையாக ஓய்வு பெறும் நாளான இன்று, தனது பணியில் இருந்து சங்கர் ஜிவால் ஓய்வு பெறுகிறார். இவரது சிறப்பான பணியால், ஓய்வு பெற்ற இவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தீயணைப்பு ஆணையம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி வெங்கட்ராமன், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். மேலும் தமிழ்நாடு காவல்துறை (தலைமையிடம்) டிஜிபி யாக பணியாற்றிய வினித் தேவ் வான்கடே , தமிழ்நாடு காவலர் குடியிருப்பு மேலாண இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Advertisement

Related News