தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு காவல்துறையில் 3665 கான்ஸ்டபிள்கள்

i) காவல்துறை- இரண்டாம் நிலை காவலர்- ஆண்கள், பெண்கள் உள்பட 2833 பேர்.

Advertisement

ii) சிறை மற்றும் சீர்திருத்தத்துறை- இரண்டாம் நிலை சிறைக் காவலர்: மொத்த இடங்கள்: 180. ஆண்கள்-142, பெண்கள்-38.

iii) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: ஆண்கள்- 631 இடங்கள்.

தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி பொதுப் பிரிவினர் 18 லிருந்து 26 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்பட்டோர்/முஸ்லிம்/மிகவும் பிற்பட்டோருக்கு 2 வருடங்களும், எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்கள் 31 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகள் 37 வயது வரையிலும், முன்னாள் ராணுவத்தினர் 47 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ.18,200- ரூ.67,100.

உடற்தகுதி: குறைந்தபட்சம் ஆண்கள் 170 செ.மீ., உயரமும், பெண்கள் 159 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். (எஸ்சி/எஸ்டி- ஆண்கள் 167 செ.மீ., பெண்கள்- 157 செ.மீ). மார்பளவு (ஆண்கள் மட்டும்) சாதாரண நிலையில் 81 செ.மீ., அகலம், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., அகலம் இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் 400 மீட்டர் தூரத்தை 2½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். மேலும் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு 2 பிரிவுகளை கொண்டது. பிரிவு-1ல் தமிழ்மொழி தகுதித் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். பிரிவு-2ல் பொது அறிவு கேள்விகளுடன் 70 மதிப்பெண்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தமிழ் மொழி தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே முதன்மை தேர்வு விடைத்தாள் திருத்தப்படும்.

உடற்தகுதி தேர்வில் விண்ணப்பதாரர்கள் உயரம், மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) ஆகியவை பரிசோதிக்கப்படும். உடற்தகுதி தேர்வில் விண்ணப்பதாரர் ஓடுதல், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இறுதியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

கட்டணம்: ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.09.2025.

Advertisement