தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போக்குவரத்து விதிமீறல் அபராதம் விதிக்கும் ஒன்றிய அரசின் இ-சலான் செயலியில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும்: தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை

 

மதுரை: போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும், ஒன்றிய அரசின் இ-சலான் செயலியில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய அரசின் இ-சலான் செயலி மூலம் சாலைகளில் அதிக வேகமாகச் செல்லும் வாகனங்கள், சிவப்பு விளக்கு தாண்டுதல் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் போக்குவரத்து அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படுகிறது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 மூலம் இ-சலான் செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டிஜிட்டல் மயம் மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2016-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் இந்த செயலி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்திலிருந்து தான் இ-சலான் செயலி மூலம் அதிக அபராதத் தொகை செலுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த இ-சலான் செயலியில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும் மராத்தி ஆகிய 4 மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. எனவே, ஒன்றிய அரசின் இ-சலான் செயலியில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.