தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய கலைஞருக்கு பாரத ரத்னா விருது : திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

டெல்லி : ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்திய முத்தமிழ் அறிஞர், கலைஞருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தி உள்ளார். மக்களவை விவாதத்தின் போது பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், திராவிட சித்தாந்தத்தின் ஒளி விளக்காக திகழும் திகழ்ந்தவர் கலைஞர் என்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றப்படும் பல முற்போக்கு கொள்கைகளை செயல்படுத்தியவர் கலைஞர் என்றும் கூறினார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது அரசியல் மற்றும் இலக்கிய திறன்களால் முதலமைச்சராக உயர்ந்தவர் கலைஞர் என்றும் இந்தியாவின் அனைத்து குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களுடன் நெருங்கிப் பழகியவர் கலைஞர் என்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார்.

Advertisement

மேலும் பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன், "திராவிடக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் சாம்பியனாக திகழ்ந்தவர் கலைஞர். சமூக அக்கறை கொண்ட அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் கலைஞர். சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் சாம்பியன் கலைஞர். ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும், ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் செயல்பட்டவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர், தான் போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வென்றவர். கலைஞரின் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை அவருக்கு வழங்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Related News