தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழர்களுக்கு தமிழ் தெரியல: பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சை

நாகர்கோவில்: தமிழர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: குமரியில் மலையாளம், தமிழ் இரண்டும் பேசுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் கிராமங்களில் கூட தமிழ் மொழி தெரியாத குழந்தைகள் உள்ளனர்.
Advertisement

முதலில் தமிழர்கள் தங்களுக்குள், தங்கள் வீடுகளில் தமிழில் பேச விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். ஒன்றிய அரசு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தவில்லை. பல வகை கல்வி நிதி வந்து கொண்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை திட்டத்திற்காக ஒதுக்கிய பணத்தை, அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டதால், வழங்கவில்லை. பொதுப்பணித்துறையில் ஒரு பணிக்கு நிதி ஒதுக்கிவிட்டு, அதனை வேறு பணிக்கு பயன்படுத்த முடியுமா? அப்படி பயன்படுத்த அனுமதித்தால் அதனை மேற்பார்வை செய்யும் அமைச்சர் மீது நடவடிக்கை பாயுமே. அதுபோன்றுதான் இதுவும்.

மும்மொழி கொள்கையில் தாய்மொழி தமிழ் கட்டாயம். ஆங்கிலம் தவிர 3வது மொழியாக இந்தி கட்டாயமல்ல. 3வது மொழியாக எந்த இந்திய மற்றும் அந்நிய மொழியை பயிற்றுவிக்கலாம். தமிழனாக தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வர எனக்கும் ஆசை உண்டு. அது ஒரு காலத்தில் நடக்கலாம். ஒன்றிய பா.ஜனதா அரசு தமிழ் மொழியை இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பெருமை படுத்தி வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement