தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வரவேற்கத்தக்கது: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சேலம்: தமிழகத்தில் காலை உணவு திட்டம் வரவேற்கத்தக்கது. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க தயாராக உள்ளது என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில், பாஜ சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில், மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
Advertisement

2020ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டத்தில், காலை உணவு திட்டம் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவுத் திட்டம் வழங்குவது வரவேற்கத்தக்கது. இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. இத்திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது.

அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீட் தேர்வு மிகவும் அவசியமான ஒன்று. நீட் தேர்வில் ஒரு சில இடங்களில் தவறு நடந்துள்ளது. தேர்வில் தவறு செய்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால், புதிய சட்டத்தின்படி 10 ஆண்டு தண்டனை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News