தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் மின் உற்பத்திக்கு கைகொடுக்கும் காற்றாலைகள்

Advertisement

நெல்லை: இந்தியாவிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை காற்றாலை சீசனாக கருதப்படுகிறது. குமரி மற்றும் நெல்லை, தென்காசியின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் இருந்து காற்றாலை மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்யப்படும்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தற்போது தென் மேற்கு பருவ காற்று பலமாக வீசி வருவதால், கடந்த 3 தினங்களாக காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் (13ம் தேதி) நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டு மொத்த காற்றாலை மின் உற்பத்தி 4,882 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி நெல்லை மண்டலத்தில் காற்றாலை மின் உற்பத்தி 2006 மெகாவாட்டாகவும், ஈரோடு மண்டலத்தில் 1141 மெகாவாட்டாகவும் இருந்தது.

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் காற்றாலைகளின் மின் உற்பத்தி 4 ஆயிரத்தை தாண்டியே உள்ளதாக காற்றாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அதிகரிக்கும் காற்றாலை மின் உற்பத்தியால், மின்தட்டுப்பாடு பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 21 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக உள்ள நிலையில், காற்றாலை மின்சாரம் தற்போது ஓரளவிற்கு கை கொடுக்க தொடங்கியுள்ளது.

Advertisement

Related News