தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிஜிபி உத்தரவை அடுத்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் தமிழ்நாடு போலீசார் தீவிரம்

Advertisement

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர் முதல் டிஎஸ்பி வரை காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார்.

இதேபோல் சட்டம் ஒழுங்கு புதிய கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தமிழக அரசு நியமித்தது. இந்தநிலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் முதல் டிஎஸ்பி.க்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும். லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து இருந்தார்.

டிஜிபி அறிவுறுத்தலை அடுத்து எஸ்.ஐ. முதல் டி.எஸ்.பி. வரை காவல்துறையினருக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர் முதல் டிஎஸ்பி வரை காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Advertisement

Related News