தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்பிக்கள் நாளை பதவியேற்பு

சென்னை: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த 39 எம்பிக்கள் நாளை பதவியேற்கின்றனர். இந்தியாவின் 18 மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதி, புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.
Advertisement

அதே நேரத்தில் பாஜ அரசு கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் 3வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் புதிய எம்பிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதனால், இன்று முதல் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். இதற்கிடையில் தமிழக எம்பிக்கள் அனைவரும் நாளை பதவியேற்கிறார்கள்.

இதுதொடர்பாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிகுமார் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”விசிக தலைவர் திருமாவளவன், நான் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்பிக்கள் ஜூன் 25ம் தேதி(நாளை) பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் பதவி ஏற்கிறோம். முதல் நாளான ஜூன் 24ல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 15 பேர் உட்பட 280 பேர் பதவி ஏற்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Advertisement