தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு: செப்.4 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு’ நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான இந்த தேர்வு அக்டோபர் 11ம் தேதி நடைபெற உள்ளது. இதில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 வருடங்களுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் (மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ) மாணவ, மாணவிகள் இந்த தேர்வு எழுத தகுதிவுடையவர்கள். www.dge.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் இன்று முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். செப்டம்பர் 4ம் தேதி கடைசி நாள் ஆகும்.
Advertisement
Advertisement