தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கலைவாணர் அரங்கத்தில் ‘தமிழ் செம்மொழி’ குறித்த கண்கவர் கண்காட்சி: பொதுமக்கள் 9ம் தேதி வரை பார்க்கலாம்

சென்னை: கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘தமிழ் செம்மொழி’ குறித்த கண்கவர் கண்காட்சியை பொதுமக்கள் 9ம் தேதி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞரின் 102ம் பிறந்த நாளான செம்மொழி நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு, கலைஞரின் அரிய ஒளிப்படங்களின் தொகுப்பு, தமிழ்ச் செவ்வியல் முதல் பதிப்பு நூல்கள், காலந்தோறும் தமிழ் மற்றும் தமிழ் மொழியின் வரலாறு, தமிழர் தொன்மை குறித்த ஓலைச்சுவடிகள் அடங்கிய ‘தமிழ்ச் செம்மொழி’ கண்காட்சியின் சிறப்புகளை பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கம் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்ச் செம்மொழி குறித்த கண்கவர் கண்காட்சி வருகிற 9ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதனை, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள், வரலாற்று அறிஞர்கள் எவ்வித கட்டணமுமின்றி நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிட்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News