தமிழக வடக்கு, தெற்கில் காற்று சுழற்சிகள் நீடிப்பு இன்று முதல் மழை அதிகரிக்கும்
Advertisement
தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், வ டக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளி்ன்மேல் ஒர வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன் தென்னிந்திய பகுதிகளின் மேலும் ஒர வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. இதுதவிர வட மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்துள்ளது.
அதன் தெ ாடர்ச்சியாக இன்று முதல் 27ம் தேதி வரை நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement