தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்..!!
சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர்.28, 29, 30 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12-20 செ.மீ. வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 3 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 2 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது.
Advertisement
Advertisement