தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரும் தமிழ்நாடு அரசு: 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க மருத்துவ கல்வித்துறை திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் புதிய 6 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான அனுமதியினை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கோர உள்ளது. என்.எம்.சி என்று சொல்லக்கூடிய தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதியினை வழங்குவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான நடைமுறை விரையில் தொடங்க இருப்பதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இத்தகைய 6 மருத்துவ கல்லூரிகள் மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியினை தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு கோர உள்ளது. அதே போல், 2025-26ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழ்நாடு அரசும், மருத்துவ கல்வி இயக்குநரகமும் திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள்படி மருத்துவ கல்லூரிகளுக்கான விதிகள் தற்போது வரை முடிக்கப்பட்டிருப்பதாகவும், கல்லூரிகளுக்கான 25 ஏக்கர் இடம், 21 துறைகள் இருக்க வேண்டும். 10 லட்சம் மக்கள் தொகை இருக்கக்கூடிய பகுதியில் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளின்படி 6 மருத்துவ கல்லூரிகளுக்கான தயார் நிலை எட்டப்பட்டிருப்பதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளில் பல நிபந்தனைகளும் மாற்றப்பட்டிருப்பதனால் விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் இதற்கான விண்ணப்பம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் வழங்க இருப்பதாகவும் மருத்துவ கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.