தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம்!!

சென்னை: தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் கூறியதாவது; தமிழக அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களில் 81% மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2011 செப். 8 முதல் 2025 அக்.வரை 211 சட்ட மசோதாக்கள் பெறப்பட்டு 170 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 73 சட்ட மசோதாக்களுக்கு ஒரு வாரத்திலும், 61 சட்ட மசோதாக்களுக்கு ஒரு மாதத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

27 மசோதாக்களுக்கு 3 மாதத்திலும், 9 சட்ட மசோதாவிற்கு 3 மாதத்திற்கு மேல் கால அவகாசத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 13% மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. 8 மசோதாக்கள் அக். இறுதி வாரத்தில் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டுள்ளது. 10 மசோதாக்கள் நிறுத்திவைக்கப்பட்டு, அதற்கான விளக்கம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியபோது ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மசோதாவையும் மிகுந்த கவனத்துடன் பரிசீலித்து ஒப்புதல் தரப்படுகிறது என ஆளுநர் மளிகை விளக்கமளித்துள்ளது.

Advertisement

Related News