தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்..!!
சென்னை: தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறுகையில், ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் . தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement
ஃபாக்ஸ்கானின் இந்திய பிரதிநிதி ராபர்ட் வூ முதலமைச்சரை சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்தார். மின்சாதனங்கள் உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு பெரிய முன்னேற்றம் அடையும். செயற்கை நுண்ணறிவு, உற்பத்தி, ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் மேம்பட்ட செயல்பாடுகளை ஃபாக்ஸ்கான் தொடங்கவுள்ளது என தெரிவித்தார்.
Advertisement