தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு முழுவதும் பூக்கள் விலை கடும் உயர்வு: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களுக்கு கிராக்கி

மதுரை: தமிழ்நாட்டின் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி மலர் சந்தைகளும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வியாபாரம் காலையிலேயே களைகட்டியது. மதுரையின் சிறப்பே மல்லிகை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மல்லிகை கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.2000 வரை விற்கப்படுகிறது. பிச்சி ரூ.1200க்கும், முல்லை ரூ.1000ஆக உள்ளது. கேரளாவில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையிலும் பூக்களின் விலை அதிகரித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு ரூ.400ஆக இருந்த பிச்சி பூ விலை தற்போது ரூ.1000ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

அனைத்து பூக்களின் விலையும் தோவாளை மலர் சந்தையில் உயர்ந்துள்ளது. ஓணம் பண்டிகைக்காக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து வாடாமல்லி, கோழிக்கொண்டை, செண்டுமல்லி, செம்மங்கி, செவ்வந்தி போன்ற பூக்கள் அதிகளவில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ரூ.10க்கு விற்பனையான செண்டுமல்லி, தற்போது ரூ.130க்கும், ரூ.20ஆக இருந்த ஒரு கிலோ வாடாமல்லி ரூ.250க்கும் விற்கிறது. சங்கரன்கோவில் மலர் சந்தையிலும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பண்டிகைகளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளுடன், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement