தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் போலி வாக்காளர்களை நீக்க SIR பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி!

கோவை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; எஸ்ஐஆருக்கு ஆதரவாக அதிமுக வழக்கு தொடர்ந்தது உண்மைதான். போலி வாக்காளர்களை நீக்க எஸ்ஐஆர் பணிகள் அவசியம். எஸ்ஐஆர் என்றாலே அலறுகின்றனர், பதறுகின்றனர். எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ள ஒரு மாதம் காலம் இருக்கிறது. 300 வீடுகள் இருக்கும் ஒரு பாகத்தில் வாக்காளர் படிவம் கொடுக்க 8 நாட்கள் போதும்.

Advertisement

எஸ்ஐஆர் பணிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை. எஸ்.ஐ.ஆர் குறித்து தவறான செய்தி பரவி வருகிறது. தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதே எஸ்.ஐ.ஆரின் நோக்கம். வீடு மாறி சென்றவர்கள், வெளிநாடு சென்றவர்கள் பல ஆண்டுகாலமாக வாக்காளர் பட்டியலில் உள்ளனர். தகுதியான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற எஸ்ஐஆர் பணி முக்கியம். முறைகேடுகளாக இருக்கின்ற வாக்காளர்களை நீக்க எஸ்.ஐ.ஆர். அவசியம் என அவர் தெரிவித்தார்.

என் மகனையோ, மருமகனையோ கட்சியில், ஆட்சியில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இதற்குமுன் கட்சியில் இருந்து விலகியவர்கள் குடும்ப அரசியல் குற்றச்சாட்டை என் மீது வைத்தார்களா? என் மீது வேறு குற்றச்சாட்டு வைக்க முடியாததால் குடும்ப அரசியல் எனக்கூறுகிறார் செங்கோட்டையன். தொண்டர்களை உற்சாகப்படுத்த, கட்சியை வளர்க்க விஜய் அவ்வாறு பேசியுள்ளார் என திமுக - தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Advertisement

Related News