தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Advertisement
Advertisement