தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி அந்தியோதயா ரயில் ஆகஸ்ட் 1 முதல் 14ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Advertisement

சென்னை: தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்தியோதயா ரயில் ஆகஸ்ட் 1முதல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் பகுதியில், ரயில்வே பணிகளை மேம்படுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது. அதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம்-நாகர்கோவில் இடையே ரயில் எண்(20691) இரவு 11 மணிக்கு இயக்கப்படும் அந்தியோதயா ரயிலானது, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, நாகர்கோவில் இருந்து மாலை 3.50 மணிக்கு தாம்பரம் புறப்படும், அந்தியோதயா ரயில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. வழி மாற்றம்: சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.55 மணிக்கு சேலம் செல்லும் ரயில் எண்( 22153), ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை எழும்பூரிலிருந்து புறப்படாமல், சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக, செங்கல்பட்டு, விழுப்புரம்,சேலத்திற்கு புறப்படும்.

பகுதியளவு ரத்து: காரைக்குடி-எழும்பூர் இடையே அதிகாலை 5.35 மணிக்கு இயக்கப்படும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் ரயில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை காரைக்குடி-செங்கல்பட்டு இடையே வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூருக்கு இயக்கப்படாது. மறுமார்க்கமாக எழும்பூர்-காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் ரயில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை, செங்கல்பட்டிலிருந்து இயக்கப்படும். எழும்பூரிலிருந்து இயக்கப்படாது.

எழும்பூர்-மதுரை இடையே, இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ், ஆகஸ்ட் 1ம் தேதி ஆகஸ்ட் 14ம் தேதி வரை செங்கல்பட்டிலிருந்து மதியம் 2.48 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக காலை 6.40 மணிக்கு மதுரையிலிருந்து-எழும்பூருக்கு புறப்படும், வைகை எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூர்-திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை செங்கல்பட்டிலிருந்து நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்படும்,

ஐதராபாத்-தாம்பரம் இடையே சார்மினார் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 1ம் தேதி 14ம் தேதி வரை தாம்பரத்துக்கு மாற்றாக, சென்னை கடற்கரைக்கு வந்து சேரும். மறுமார்க்கமாக தாம்பரம்-ஹைதராபாத் இடையே இயக்கப்படும் ரயில் ஆகஸ்ட் 1ம் தேதி 14ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.20 மணிக்கு இயக்கப்படும். தாம்பரம்-செங்கோட்டை இடையே இரவு 9 மணிக்கு இயக்கப்படும் ரயில், ஆகஸ்ட் 1,4,6,8,11,13ம் தேதி வரை தாம்பரம்-விழுப்புரம் வரை ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்திலிருந்து இரவு 11.15 மணிக்கு செங்கோட்டைக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக, செங்கோட்டை- தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் ஆகஸ்ட் 2,5,7,9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement