தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாம்பரம் -செங்கல்பட்டு இடையே 4வது ரயில் வழித்தடம் அமைக்கும் பணி: தெற்கு ரயில்வே தீவிரம்

சென்னை: தாம்பரம் -செங்கல்பட்டு இடையே 4வது ரயில் வழித்தடம் அமைக்கும் பணியில் தெற்கு ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே சுமார் 60 கிலோ மீட்டர் நீளம் உள்ள வழித்தடத்தில் தினசரி 4 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை கடற்கரையிலிருந்து-தாம்பரம் வரையில் 4 வழித்தடங்கள் ரயில்வே தரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில் 23 தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்களும், 7 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களும், புறநகர் மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் இத்தகைய வழித்தடத்தில் 3 வழித்தடங்கள் மட்டும் இருப்பதன் காரணமாக பெரும்பாலான புறநகர் மின்சார ரயில் சேவைகள் செங்கல்பட்டு வரை இயக்கமுடியாத நிலை தொடர்கிறது.

Advertisement

இந்த நிலையில் தாம்பரம் -செங்கல்பட்டு இடையே 31 கிலோ மீட்டருக்கு 4வது வழித்தடம் அமைப்பதற்கு இட ஆய்வு இறுதி செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரூ.713.4 கோடி மதிப்பீட்டில் 4வது வழித்தடம் அமைப்பதற்கு ரயில்வே வாரியத்திடம் ஒப்புதல் அளிப்பதற்கு உரிமை கோரப்பட்டுள்ளது. வாரியம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் பணிகளை விரைந்து துவங்கிட ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது.

4வது வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சென்னை கடற்கரையிலிருந்து-செங்கல்பட்டு வரைக்கும் 4 பிரதான வழித்தடங்கள் இருப்பதன் காரணமாக வரும் நாட்களில் கூடுதலான புறநகர் மின்சார ரயில் சேவைகளையும், விரைவு ரயில் சேவைகளையும் செங்கல்பட்டு வரை இயக்க முடியும் என்பது ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 31 கிலோ மீட்டருக்கு 4வது ரயில்பாதை அமைக்கும் பட்சத்தில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் எனவும், 4வது வழித்தடம் என்பது ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைப்பதற்கு பரிந்துரைக்கபட்டிருப்பதாகவும் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

Advertisement