தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக புறநகர் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி!

சென்னை: தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் செல்லக் கூடிய வழித்தடத்தில் உள்ள மரக்கிளைகளை வெட்டு பணியில் ரயில்வே நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மின்கம்பம் மீது மரக்கிளை விழுந்ததன் காரணமாக மின்கம்பம் வெடித்து பயங்கர சத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், சென்னை கிண்டியில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்ல கூடிய மின்சார ரயில்கள் அந்தந்த ரயில் நிலையங்களில் அரைமணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement

இதனால் பணிகளுக்கு செல்ல கூடியவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து பயணிகள் அரைமணி நேரத்துக்கு மேலாக தவித்து வருவதால், ரயிலில் இருந்து இறங்கி அருகில் உள்ள பேருந்து நிலையம் சென்றனர். இதற்கிடையே மின்கம்பத்தில் விழுந்த மரக்கிளையை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 2 மணி நேரத்திற்க்கு மேல் இந்த பணி நடைபெறும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement