தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாம்பரம் விமானப்படைத் தளத்தில் அக்னிவீரர் தேர்வு: தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் அக்னிவீரர் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இருந்து 3,000 இளைஞர்கள் குவிந்து இருந்தனர். நான்கு கட்டங்களாக நடைபெறுகின்ற அக்னிவீரர் தேர்வானது, முதல் கட்டமாக 27ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 27ஆம் தேதி ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களில் சேர்ந்தவர்கள் அக்னிவீரர் தேர்வுக்கு வந்திருந்தனர். அதனை அடுத்து 30ஆம் தேதி கர்நாடக, கேரளா மாநிலத்தில் சேர்ந்த இளைஞர்கள் 5,400க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

Advertisement

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், லச்சத்தீவு உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், தாம்பரம் விமானப்படைத் தளத்தில் நேற்று இரவு முதலே அதிகளவில் இளைஞர்கள் வந்து அக்னிவீரர் தேர்வுக்காக காத்திருந்தனர். அதிகாலை முதலே அவர்கள் உயரம் மற்றும் அவர்கள் மதிப்பெண் சான்றிதழ் ஆய்வு செய்து, அக்னிவீரர் தேர்வு பணி நடைபெற்றது. இதற்கு காவலர் ஆய்வாளர் சண்முக தலைமையில் 130 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதையடுத்து தாம்பரம் மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிடம் மற்றும் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. தமிழக வீரர் மட்டும் 3,000 வீரர்கள் மேல் வந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து 5ஆம் தேதி இறுதி கட்டமாக நடைபெறும் அக்னிவீரர் தேர்வில் பெண்கள் மட்டும் பங்கேற்கிறார்கள். ஆந்திர, தெலுங்கானா, கர்நாடக, கேரளா, தமிழ்நாடு மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்க்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News