தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலிபான் அரசின் விசித்திர ஆணை; ஆப்கானிஸ்தானில் ‘வைஃபை’-க்கு தடை: ஒழுக்கக்கேட்டை தடுப்பதாக விளக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பொதுமக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது ஒரு மாகாணம் முழுவதும் இணையச் சேவைக்குத் தடை விதித்து அதன் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாதா உத்தரவிட்டுள்ளார். நாட்டின் வடக்கே உள்ள பால்க் மாகாணத்தில் இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

Advertisement

கம்பிவட மற்றும் ஒளியிழை வழியே வழங்கப்படும் இணையச் சேவைகளுக்கு இந்தத் தடை பொருந்தும் என்பதால், மாகாணத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் வீடுகளில் வைஃபை சேவை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒழுக்கக்கேடான விஷயங்களைப் பார்ப்பதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். செல்போன் இணையச் சேவைக்குத் தடை இல்லை என்றாலும், அதுவேகம் குறைவாகவும், அதிக செலவு பிடிக்கக்கூடியதாகவும் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்தத் தடையால் மசார்-இ-ஷெரீப் போன்ற முக்கிய நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் வர்த்தகம் செய்யும் தொழில் முனைவோர் பெரும் நிதி இழப்பைச் சந்திப்பதாக அஞ்சுகின்றனர். தலிபான்களின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சி, பாதிக்கப்பட்ட மக்களில் பலர் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை.

Advertisement