தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு

Advertisement

தூத்துக்குடி: தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி கோரம்பள்ளம் ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விவசாயம் உள்பட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் கடன் தொல்லைகள் நீங்கி செல்வ வளம் பெருகிடவும், முன்ஜென்ம பாவங்கள் நீங்கி வளமாக வாழவேண்டியும் லட்சார்ச்சனையுடன் கூடிய சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.

இதையொட்டி காலை முதல் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமமம், கன்னிகா பூஜை, மஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் ஹோமமும் நடந்தது.தொடர்ந்து, மஹா பிரத்தியங்கிராதேவி மஹா காலபைரவருக்கு லட்சார்ச்சனை இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது. மதியம் பால், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையுடன் கூடிய சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மஹா யாக வழிபாடுகள் தீபாராதனையுடன் நிறைவடைந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சித்தர்பீடம் வழிபாட்டுக்குழுவினர் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Advertisement

Related News