தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெ.ஆ. ஏ அணியுடன் 2 டெஸ்ட்: ரிஷப் பண்ட் தலைமையில் இந்தியா ஏ அணி அறிவிப்பு; துணை கேப்டன் சாய் சுதர்சன்

பெங்களூரு: தென் ஆப்ரிக்கா ஏ கிரிக்கெட் அணியுடனான 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்கா ஏ கிரிக்கெட் அணி, இந்தியா ஏ அணியுடன் இரு 4 நாள் போட்டிகள் தொடரில் ஆடவுள்ளது. முதல் போட்டி அக்.30ம் தேதியும், 2வது போட்டி நவ. 6ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த இரு போட்டிகளில் ஆடும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் (28) நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட், இந்தாண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் ஆடியபோது கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதன் பின் நடந்த போட்டிகளில் இந்திய அணிக்காக ஆட முடியாமல் போனது.

Advertisement

பல மாதங்களுக்கு பின் இந்திய அணியில் அவர் மீண்டும் இடம்பெற்றுள்ளார். இந்தியா ஏ அணியின் துணை கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வீரர்கள், கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல், முகம்மது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர், இந்தியா ஏ அணி ஆடும் 2வது போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா, காயத்தில் இருந்து குணமாகி, இந்தியா ஏ அணியுடனான 2வது டெஸ்டில் ஆடுவார் எனத் தெரிகிறது.

இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

முதல் டெஸ்ட்: ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே, ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் தூபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாக்குர், ஆயுஷ் படோனி, சரன்ஷ் ஜெயின். 2வது டெஸ்ட்: ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் தூபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் அஹமது, குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகம்மது சிராஜ், ஆகாஷ் தீப்.

Advertisement

Related News