த.வெ.க கொடியில் உள்ள யானைகளை அகற்ற வேண்டும்: பிஎஸ்பி மாநில தலைவர் வலியுறுத்தல்
Advertisement
இதுதொடர்பாக எங்களுடைய கட்சியின் மத்திய தலைமை அந்த கட்சியினுடைய தலைமையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்படி கூறியது. அதன் அடிப்படையில் அவர்களது மேலாளர் வெங்கட்டை தொடர்பு கொண்டோம். இது சம்பந்தமாக சட்ட விளக்கங்களை அனுப்பியுள்ளோம். இது சம்பந்தமாக அவர்கள் பரிசீலித்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளனர். கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்து வந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய தலைமை நேரடியாக அவர்களுக்கு தகவல்களை தெரிவித்து சட்ட நகல்களை வழங்குமாறு கூறியிருக்கிறார்கள். அதன்படி வழங்கியிருக்கிறோம். அவர்கள் நல்ல முடிவாக எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
Advertisement