தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உட்பட 3 பேர் பலி: பழிக்குப்பழி வாங்குவோம் என டிரம்ப் சபதம்

வாஷிங்டன்: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மறைந்திருந்து நடத்தியத் தாக்குதலில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சிரியாவில் கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கப் படையினர் மீது பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தாக்குதல்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் சிரியாவின் உள்ளூர் படைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில், சிரியாவின் மத்தியப் பகுதியான பால்மைரா நகரில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படையினர் மீது ேநற்று ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் என மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில், பதில் தாக்குதலில் அந்தப் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிரியாவில் மூன்று சிறந்த தேசபக்தர்களை இழந்துள்ளோம்.

இதற்குக் காரணமானவர்களைச் சும்மா விடமாட்டோம்; நிச்சயம் இதற்குப் பழிக்குப்பழி வாங்குவோம்’ என்று சூளுரைத்துள்ளார். அதேபோல் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் வெளியிட்ட அறிக்கையில், ‘உலகில் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள், அமெரிக்கர்களைக் குறிவைத்தால், உங்களைத் தேடிக் கண்டுபிடித்து வேட்டையாடுவோம். உங்களின் எஞ்சிய வாழ்நாளைப் பயத்துடனே கழிக்க நேரிடும்’ என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Related News