தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாடத்திட்டத்தில் ஆரியன், திராவிடன் கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் நிபுணர் அல்ல: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாலிங்கம் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மாணவர்கள் மத்தியில் பாடத்திட்டத்தில் ஆரியன், திராவிடன் என்ற இனம் தொடர்பானவற்றை பரப்பக்கூடாது என்று ஒன்றிய கல்வி அமைச்சகம், தேசிய கல்வி கவுன்சில், தமிழக பள்ளி கல்வி துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், தமிழக பள்ளி கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
Advertisement

இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி, கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்கள் மத்தியில் ஆரியன், திராவிடன் என்று 2 இனங்களை பரப்புகிறார்கள். இதனால், மாணவர்கள் மனதில் தவறான விளைவுகளை ஏற்படுகிறது என்றார். அதற்கு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ெஜ.ரவீந்திரன் ஆஜராகி, நிபுணர்களின் ஆய்வு மற்றும் அவர்களிடம் இருந்து பெறும் ஆலோசனைகளின் அடிப்படையில் பாடத்திட்டம் வகுக்கப்படுகிறது.

மனுதாரர் மனு கொடுக்கும் பட்சத்தில் அவரது மனு குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசீலித்து முடிக்கப்படும் என்றார். ஒன்றிய அரசு தரப்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி, தமிழக அரசு தரப்பு கூறியதைபோல் தேசிய கல்வி கவுன்சிலுக்கு மனுதாரர் மனு அனுப்பலாம் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இனம் மற்றும் தோற்றம் ஆகியவற்றின் வரலாறு குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் நிபுணர் அல்ல. இரு இன கோட்பாடு என்பது குறித்து ஆய்வு செய்யாமல் அது தவறா, செல்லுமா, செல்லாதா என்று உத்தரவிட முடியாது.

இந்த விஷயத்தை நீதிமன்றத்தால் அல்ல, சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். இந்த வழக்கில் எந்த கருத்தையும் கூற முடியாது. எனவே, தேசிய கல்வி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகியவை இந்த மனுவில் கூறப்பட்டுள்ள மனுதாரரின் கோரிக்கைகளை பரிசீலித்து 12 வாரங்களுக்குள் முடித்துவைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

Advertisement