தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவி நடத்தையில் சந்தேகம் மகள்களை கொன்று தந்தை தற்கொலை: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரை கூடல் புதூர் பகுதியில் உள்ள முடக்கத்தான் அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் கோபிராஜ் (40). இவரது மனைவி பாலகாயத்ரி (35). யுவஸ்ரீ(10), கனிஷ்கா (5) என 2 மகள்கள் இருந்தனர். கோபிராஜ்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலகாயத்ரி சில நாட்களுக்கு முன், அவரது தாயார் வீட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையடைந்த கோபிராஜ், நேற்று இரவு இரு மகள்களுக்கும் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட குழந்தைகள் இருவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர். இருப்பினும் இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இல்லாத கோபிராஜ், அவர்களின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Advertisement

பின்னர் அவர் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே, அவர்கள் வீட்டில் எந்த சத்தமும் இல்லாமல் இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், உள்ளே வந்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தைகள் இருவரும் இறந்து கிடந்ததுடன், கோபிராஜ் தற்கொலை செய்து கொண்ட விபரம் தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கூடல் புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மூவரின் உடல்களையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News